Skip to main content

இந்திர நீலம்: {BLUE SAPPHIRE}

இந்திர நீலம்:
{BLUE SAPPHIRE}
##################
இந்திரம் என்றால் வானம் என்பது பொருள். அதாவது வானத்தைப் போன்ற அழகான நீல நிறமுள்ளது ஆகும்.

கையில் எடுத்துப் பார்க்கும்போது உட்புறம் கருப்பாக இருக்கும்.

 இதை வான் நீலம் என்றும் கூறலாம். இதுவே தரத்தில் சிறந்தது. விலையும் அதிகமானது.

இதன் இரசாயணக் குறியீடு (AI2O3) கோரண்டம்(CORUNDAM) என்னும் வகையைச் சேர்ந்தது. 

நீலமாக விளையும்போது நீலக்கற்கள் எனப்படுகின்றது. 

நீலத்தின் கடினத்தன்மை 9. இதன் ஒப்படர்த்தி 4 ஆகும். இதன் ஒளிவிலகல் எண் 1.76 -1.77.

நீலத்தின் குணங்கள் கணம், மனத்தைக் கவரும் ஒளி, நல்ல பூரிப்பு, பக்கங்களில் பூரிப்பு, புல்லைப் பிடிக்கும் தன்மை ஆகிய ஐந்தும் நீலரத்தினத்தின் குணமாக ஸ்மிருதிஸாரோத்ஸரம் கூறுகிறது.

நீலக்கற்கள் குற்றங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். 

அதை அணிந்தால் மனிதருக்கு செல்வம், ஆயுள், பலம், புகழ் ஆகியவை உண்டாகும். என பழம் நூல்கள் கூறுகின்றன.

தரமான நீலக்கற்கள் அணிவதால்,
1. வாழ்நாள் அதிகரிக்கும்.

2. கோழைத்தனத்தை மாற்றித் தைரியத்தைக் கொடுக்கும்.

3. எதிரிகள் இவரைக் கண்டு பயப்படுவார்கள்.

4. வழக்குகளில் வெற்றி உண்டாகும்.

5. வாகனங்கள் வசதி உண்டாகும்.

6. மனத்தில் சோகம் நீங்கி, மகிழ்ச்சியும் நம்பிக்கையும் உண்டாகும்.

7. பூமியின் மூலமாகவும், அதிலிருந்து கிடக்கும் பொருட்களின், மூலமாகவும் இலாபங்கள் உண்டாகும்.

8. எதிர்பாராத கண்டங்கள், ஆபத்து , அகால மரணம் ஆகியவற்றை தடுக்கும்.

9. பித்தத்தால் ஏற்படும் நோய்களைத் தடுக்கும்.

10. கை, கால் பிடிப்புகள், வலிகள் ஆகியவை நீங்கும்.

11. ஆரோக்கியமும் , ஆயுளும், அமைதியும் கொடுக்கும்.

12. நிர்வாகத் திறமையையும், தொழிலாளர்களின் ஆதரவையும் கொடுக்கும்.

13. தோல் வியாதிகளைக் குணமாக்கும்.

14. கல்லீரல் மற்றும் மன்ணிரலைக் குணபடுத்தும் வல்லமை உடையது.

15. பெருவியாதிகளைத் தடுக்கும் ஆற்றல் படைத்தது.

ஜாதகப்படி யார் அணிந்து கொள்ளவேண்டும்?
=================
சனி பகவானின் நட்சத்திரங்களான பூசம்,அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்ச்சத்திரங்களில் பிறந்தவர்கள் நீலமணியை அணிந்து கொள்ளலாம்.

மகரம், கும்பம், இலக்கினத்தைச் சேர்ந்தவர்கள் நீலக்கல் அணிந்து நன்மைகள் அடையலாம்.

மகரம், கும்பம் இராசிகளைச் சேர்ந்தவர்களும் நீலக்கற்களை அணிந்து சனி பகவானின் அருளை பெறலாம்.

சனியின் திசாபுத்திகள் தற்காலத்தில் நடைபெறும் அன்பர்களும், நீலக்கல்லை அணிந்து நன்மைகளை அதிகரிக்கச் செய்யலாம்.

சனியின் திசை முடிந்த பின்பு அந்தக் கல்லை எடுத்துவிடவேண்டும்.

ஜாதகத்தின் படி, ரிஷப இலக்கினக்காரர்களுக்கு சனி இராஜயோகத்தைக் கொடுக்கும் ஆற்றல் பெற்றவர்!
அவர் ஜாதகத்தில் பலவீனம் அடைந்திருந்தால் ஜாதகர்க்கு நன்மைகள் கிடைக்காது! 
அப்போது நீலக்கல்லை அணிந்து கொண்டு சனியின் வலிமையை அதிகரிக்கச் செய்து கொண்டால் தொழிலில் அதிர்ஷ்டங்கள் உண்டாகும்.

இதைப் போன்றே தூலம் இலக்கினக்காரர்களும் சனியின் வலிமை ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால், 
நீலக் கற்களை அணிந்து யோகத்தைப்
பெருக்கிக்கொள்ளலாம்.


மிதுன இலக்கினக்காரர்களும், கன்னியா இலக்கினக்காரர்களும் சனியின் நிலைமையை ஆராய்ந்து நீலத்தை அணிந்து கொண்டால் நல்ல பலன்களை நிச்சயம் அடையலாம்.


ஜாதகப்படி சனியின் காலம், அஷ்டமச் சனி, கண்டச் சனி ஆகியவை நடைபெறும் காலங்களில் நீலம் அணிந்து கொண்டால் நல்ல பலன்களை நிச்சயம் அடையலாம்.

எண்கணிதப்படி யார் அணிந்து கொள்ளலாம்.
###############
1. ஒவ்வொரு மாதத்திலும் 8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்த அன்பர்கள் நீலக்கற்களை அணிந்து நன்மைகளை அடையலாம்.

2. ஆங்கிலத் தேதியின்படி கூட்டு எண் 8 வரும் அன்பர்களும் நீலத்தினை அணிந்து நன்மைகளை அடையலாம்.

3. உதாரணம்: ஒருவர் 26.6.1972 ல் பிறந்துள்ளார். இவரது பிறந்த தேதியின் படி (2+6)8 வருவதால் இவர் நீலக்கல்லை அணிவதன் மூலம் நன்மை அடையலாம்.

4. மற்றவர் 3.9.1976ல் பிறந்துள்ளார் என்போம். இவரது கூட்டு எண் 3+9+1+9+6+7=35 =8 வருகிறது. இவரும் நீலரத்தினம் அணிவதன் மூலம் நன்மைகள் அடையலாம்.

பெயர்கள் 8 ஆம் எண்ணில் வருவதைத் தவிர்க்க வேண்டும்.

இருப்பினும் தங்களது பெயர்களை மாற்ற முடியாமல் இருப்பவர்கள் (பெயர்எண் 8,17,26,35,44 போன்ற எண்ணில் வருபவர்கள்) நீல ரத்தினத்தை அணிந்து கொண்டால் தீமைகளைக் குறைத்து கொள்ளலாம். 

மேலும் நன்மையான பலன்களையும் அடையலாம்.









அதிஷ்ட கல்லை ஒருவர் அணிவதன் மூலம் நல்ல அதிஷ்டத்தையும் ,செல்வாக்கையும் பெற முடியும். 


காரிய தடைகளை சரி செய்ய முடியும்.

நல்ல வேலை வாய்ப்பையும் பெற முடியும். 


நல்ல திருமண வாழ்க்கையை அமைத்து கொள்ளலாம். 

நோய் நொடிகளையும் குணப்படுத்தி கொள்ள முடியும்.

உங்கள் ஜாதகத்தில் சுபங்கள் தரக்கூடிய கிரகத்தை கணித்து, சுபங்களை அதிகரிக்க செய்யும் போது தான்உடல் ஆரோக்கியமும், சிந்தனையும்,ஞாணமும் பெருகும்.


தரமான ஜாதிகற்கள் மோதிரம் செய்து தரப்படும்.
#################################
SHIVABAIRAVAR METAL WORKS
NATURAL GEMSTONE & SPIRITUAL PRODUCTS
www.spirituals4u.blogspot.in
whatsappp:+917305066366

Comments

Popular posts from this blog

மாணிக்கம் கல் பதித்த மோதிரம் : (RUBY GEMS STONE BENEFIT)ANGUTTI

மாணிக்கம் கல் பதித்த மோதிரம் : (RUBY GEMS STONE BENEFIT)ANGUTTI ################################### சிம்ம இராசிகாரர்களும்,  சூரியனுக்கு சார்புள்ள நட்சத்திரங்களும் கிருத்திகை -உத்திரம்-உத்திராடம்,மற்றும் ஜாதகத்தில் சூரிய தசை-சூரிய பார்வை- சூரிய புத்தி நடக்கும் அன்பர்களும். எண் கணிதப்படி-1,10,19,28ம்  தேதியில் பிறந்தவர்களும்  மாணிக்கம் இராசி கல்  பதித்த மோதிரம் அணியலாம். ******************************* மாணிக்கம் அணிவதன் பயன்கள்: ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்  உள்ள தோல்விகளையும்  துயரங்களையும்,போக்கவும். இரத்தினங்கள் அணிவதால்  நல்லஅதிஷ்ர்டத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும்,  செல்வச் செழிப்பையும்  பெறுவதற்கு இரத்தினங்கள்  கிரகங்களின் பிரதிநிதிகளாகவும்  செயல்படுவதால் தான் வெற்றி படிகளாக மனிதனை மாற்றி  உயர்த்தி விடுகின்றன. மாணிக்கக் கல் சிகப்பு நிறக் கதிர்கள் {RED RAYS} வெளியேற்றிக் கொண்டே இருக்கின்றன. சூரியனுடைய கதிர்கள் ஒழுங்கு செய்யப்பட்டு உடலில் ஈர்த்து நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகின்றது. குளிர்ச்சி சம்பந்தத்தினால் ஏற்படும் வியாதிகளை மாணிக்க கல் க

சந்திர காந்தக்கற்கள் பயன்கள்(MOON STONE):

சந்திர காந்தக்கற்கள் பயன்கள்(MOON STONE): இந்தக் கற்களில் வைடூரியத்தைப் போன்ற ஒளிப்பட்டைகள் கல்லின் நடுவில் அழகாக இருக்கும். இந்தக் கற்களைச் சுழற்றும் போது அந்த ஒளியும் சுழன்று கொண்டே வரும்.  இதன் கீழ்பகுதியைத் தட்டை வடிவிலும், மேல்பகுதியை மழமழப்பாகவும் வெட்டிப் பட்டை தீட்டுகின்றனர். இவைகளை ஈச்சங்கொட்டை , கப்பிக்கொட்டை போன்ற வடிவங்களிலும் வட்டமாகவும் பல உருவங்களில் தேய்த்து உருவாக்குகின்றனர். இவை ஒளி ஊடுருவிச் செல்லும் அழகான கற்களாகும். இந்தச் கற்களானது பார்ப்பதற்கு வெண்மையாகவும் குளுமையாகவும் சந்திரனைப் போன்றும் இருப்பதால் சந்திர காந்தம் என்று வடமொழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரவில் சந்திரனின் ஒளி இதன்மேல் படும்போது இந்தக் கல்லிலிருந்து நீர்த்துளி உண்டாகும் என்பார்கள். ரோமானியர்கள் இக்கற்களை லூநாரிஸ் என்று அழைத்து மகிழ்ந்தார்கள். கற்கள் கிடைக்கும் இடங்கள்: ########################## இந்தக் கற்கள் அதிகமாக ஸ்ரீலங்காவில்தான் கிடைக்கிறது. மியான்மர்(பர்மா) ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தான்சேனியா, பிரேசில், அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் அதிகமாகக் கிடைக்கிறது. கேரளா

நவரத்தினங்களில் மரகதம் கல் பயன்கள்:

NATURAL EMERALD GEMSTONE BENEFITS: மரகதக் கல்லின் ஆங்கிலப் பெயர் எமரால்ட். ஒளி புகக்கூடிய அருகம்புல்லின் நிறமுடைய இக்கல் பெரில் எனப்படும் வகையைச் சேர்ந்தது. வெளிர் பச்சை நிறத்திலிருந்து அடர்பச்சை நிறம் வரை கிடைக்கும். இந்த மரகதம் பெரில்லீயம் அலுமினியம் சிலிகேட் என்ற மூலப் பொருளாளல் ஆனது. மரகதம் அடர்த்தி குறைவானதாகவும் எடை இலேசானதாகவும் இருப்பதால் ஒரு காரட் எடையுள்ள மரகதம் சற்று பெரியதாக இருக்கும். இது நொருங்கும் தன்மை கொண்டது என்பதால் இதை உபயோகிப்பதில் கவனம் தேவை. குரோமியம் என்ற பொருள் கல்லில் இருந்தால்தான் அது மரகத் கல்லாகும். இல்லையெனில் அது பச்சை நிற பெரில் என்றே அழைக்கப்படுகிறது. பச்சை நிற பெரில்லை தகுந்த சூழ்நிலையில் உஷ்ணம் செய்தால் அக்குவாமெரின் எனப்படும். நீலபச்சை நிறக் கல்லாக மாறுகிறது. இந்த நிறமாற்றம் நிரந்தரமாக இருக்கும் பட்சத்தில் அது உலக அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. சாம்பிராணி வாசம் வந்தால் தான் மரகதம் என்ற தவறான கருத்து ஒன்று மக்களிடையே உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் திருவுருவச் சிலையானது மரகதத்தில் ஆனது என்பதால் பெரிய அளவில் அதிர்வுகளை