Skip to main content

நவரத்தினங்களில் வைரம் (DIAMOND)


நவரத்தினங்களில் வைரம்:
#######################

பலஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்த ரோமானிய ஆசிரியர்கள் இந்தியவிலுள்ள நதிமணல்களில் அடமாஸ் (வைரத்தின் ஆங்கிலப் பெயர் ADMAS) என்னும் கற்கள் காணப்பட்டன என்று எழுதி சென்றுள்ளனர். இதுவே வார்த்தை மருவி, (DIAMOND) என்று வழக்கத்தில் ஆகிவிட்டது.

பூமியின் மேற்பரப்பிலிருந்து 160 முதல் 480 கி.மீ.வரை ( 100 முதல் 300 மைல் வரை) ஆழத்தில் வைரங்கள் உருவாகின்றன. கிம்பர்லைட் என்று அழைக்கப்படும் எரிமலைக் கற்களின் உள்ளே வைரங்கள் உருவாகின்றன.

பொதுவாக எரிமலைகள் வெடித்து எரிமலைக் குழம்பைக் கக்கிக் கொண்டிருக்கும் பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் இருந்து வைரங்கள் எடுக்கப்படுகின்றன. தனியாக வைரம் ஏதேனும் காணப்படுமானால், அது கிம்பர்லைட் பாறையில் இருந்து பிரிந்து அடித்து வரப்பட்டதாக இருக்கும்.

உலகில் நாம் அறிந்திருந்த பொருள்களிலேயே மிகவும் கடினமானது வைரமாகத்தான் இருந்து வந்தது.


ஆனால் 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜெர்மானிய விஞ்ஞானிகள் வைரத்தை விடக் கடினமான பொருள் ஒன்றினை பரிசோதனையில் உருவாக்கினர்.

அக்ரிகேடட் கார்பன் நானோ ராட்ஸ் (ACNR)என்னும் இப்பொருள் மிகவும் கடினத்தன்மை கொண்ட கார்பன் மூலக்கூறுகளை 2226 பாகை செல்சியஸ் அளவுக்கு வெப்பப்படுத்தி, அழுத்தம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இவற்றில் உள்ள ஒவ்வொரு மூலக்கூறும் 60 அணுக்களைக் கொண்டுள்ளது.


இந்த அணுக்கள் எண்கோண வடிவிலும், அறுகோண வடிவிலும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. மிகச் சிறிய கால்பந்துகளைப் போன்று அவை தோற்றமளிப்பதாகக் கூறப்படுகிறது.

மிகவும் கடினத்தன்மை கொண்ட இந்த (ACNR) என்ற பொருள் பெரிய முயற்சி இன்றி மிக எளிதாக வைரத்தை அறுத்துவிடுகிறது.

உலகில் 20 நாடுகள் வைரங்களை உற்பத்தி செய்கின்றன.


ஆஸ்திரேலியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, போட்ஸ்வானா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக அதிக வைரம் உற்பத்தி செய்யும் அய்ந்தாவது நாடாக தற்போது ஆப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி என்ற இடத்திலிருந்தும் வைரம் வெட்டி எடுக்கப்படுகிறது.

இந்தியாவில் கோகினூர் என்ற இடத்தில் எடுக்கப்படும் வைரம் மிகவும் தரம் வாய்ந்ததாகவும், விலை உயர்ந்ததாகவும் உள்ளது.


வைரத்தின் தெளிவு நிறம், எடை இவற்றை வைத்தே இதன் விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

வைரத்தை எவ்வளவு நாட்கள் உபயோகித்தாலும் அதன் ஓரங்கள் தேயாமலும் நுணுங்காமலும் காணப்படும்.


விலை உயர்ந்த வைர வியாபாரத்தை உலக அளவில் கட்டுப்படுத்தும் நிறுவனமாக லண்டனில் தலைமையகத்தை கொண்ட பீபர்ஸ் விளங்குகின்றது.

வைரத்தின் நிறம்:
###############

வைரத்திற்குப் பொதுவாக நிறம் இல்லை. தெளிந்த ஆற்று நீர் போன்ற நிறமற்ற வைரமே உயர்ந்த தரம் உடையது.

இறுப்பினும் மஞ்சள், சிவப்பு, பச்சை, நீலம், சாம்பல் கலர்களில் வைரம் கிடைக்கிறது. மேலும் கறுப்பு நிறத்திலும் கிடைக்கிறது.

வைரம் மட்டுமே தன்னுள் பாய்கின்ற வெளிச்சத்தில் 85 சதவீதம் ஒளியை பல கோணங்களில் பிரதிபலித்துத் திருப்பி வெளியிலேயே அனுப்பி விடும்.

வேறு எந்த ரத்தினத்துக்கும் இந்த தன்மை கிடையாது. இதனை ஆங்கிலத்தில் (INTERNAL REFLECTION) (TIR) முழுமையான உள்பிரதிபலிப்பு என்பர். அதனால் தான் இதனை அடம் பிடிக்கும் ஜொலிப்பு (ADAMANTINE LISTER )) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

அனைவராலும் விரும்பகூடிய பெல்ஜியம் கட்டிங்:
###################################
முதல் முதலில் இந்திய வல்லுநர்கள் பட்டை தீடியதை இன்னும் மேம்படுத்தி, பெல்ஜியம் நாட்டை சேர்ந்த லோடெவிஜ்க் வேன் பெர்க்காம் என்ற வல்லுநர் 58 பட்டைகளோடு மிகவும் நன்றாக ஜொலிக்கும் முறையில் வைரத்தை பட்டை தீட்டினார். இதற்கு [ ROUND BRILLIANT CUT} இதுதான் பெல்ஜியம் கட்டிங் என்று பெயர் போனது.

வைரத்தை வெட்டவோ பட்டை தீட்டவோ செய்வதற்கு வைரத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் வைரத்தை வைத்து எல்லா ரத்தின கற்களையும் பட்டை தீட்டலாம். ஆனால் வைரத்தை பட்டை தீட்ட வைரத்தால் மட்டுமே முடியும். பட்டை தீட்டிய வைர கல்லில் உலகில் உள்ள எந்த பொருளை வைத்து உரசினாலும் அதில் கீறல் விழாது. இதைத்தான் வைரத்தின் கடினத்தன்மை( HARDNESS) என்கிறோம்.

வைரத்தின் குற்றங்கள் (DEFECTS OF DIAMONDS):
##################################
நம்நாட்டைப் பொறுத்தவரை கோடுகள், புள்ளிகள் ஏதும் இல்லாமலிருந்தால் அவை நல்ல வைரம் என்றும் அணியத் தகுந்தவை என்றும் எண்ணி வாங்கி அணிந்துகொள்கிறோம்.


ஆனால் அயல் நாட்டினர் வைரத்தின் ஜொலிப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர் என்பது கூறிப்பிடபட்டுள்ளது.

அடிப்படையில் வைரம், நன்றாக ஒருங்கிணைந்த கார்பன் மூலக்கூறுகளால் ஆனது. ஒரு வைரம் உருவாகும் போது, சில சமயம் இயற்கையில் முழுமையான கட்டமைப்பு இல்லாத கார்பன் மூலக்கூறுகளின் அணுக்கள் வைரத்தின் உள்புகுந்து இணைந்து அதனோடு வளர்ந்து விடும்.

இவை கறுப்பு நிறம் கொண்டவை. இதற்கு மற்றொரு வேதியியல் பெயர் கிராபைட்.

வைரம் பட்டை தீட்டியதும் இது உள்ளே தனியாக கறுப்பாக காணப்படும். இதற்கு ஆங்கிலத்தில் (BLACK PIQUE / BLACK SPOT) என்பார்கள். நம் நாட்டில் இதற்கு தோஷம் என்று பெயர் வைத்துவிட்டார்கள்.

வைரத்திற்கு ஐந்து வகையான குற்றங்கள் உள்ளன என்று சிலப்பதிகாரம் நூலின் மூலம் கூறுகிறது.

அதாவது வைரங்களுக்கு மலம், விந்து, யவை, ரேகை, காகபாதம் ஆகிய 5 வகைக்குற்றங்கள் உள்ளன. தமிழில் முறையே கறுப்பு, புள்ளி, ரேகை, ஒளி நடுக்கம் (ஒளி உதறல்) காக்கைக்கால் எனப்படும் என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார்.

வைரத்தின் பண்புகள்:
#################

வைரத்தின் இரசாயனக் குறியீடு ‘C’அதாவது கரி (CARBON) மட்டுமேயாகும்.இதன் கடினத்தன்மை 10. இதுவே இரத்தினங்களில் மிகவும் கடினதன்மை உடையது. இதன் ஒப்படர்த்தி 3.52 ஆகும். இதன் ஒளிவிலகல் எண் 2.42 ஆகும்.

வைரம் அணிவதால் உண்டாகும் நன்மைகள்:
###################################

உடல் உரம், மன உரம் ,வெற்றி ,செல்வம் ,அதிஷ்டம், நட்பு ஆகியவற்றுடன் தொடர்புகொண்டது வைரம்.


தன்னம்பிக்கையை வளர்க்கும் .ஆணுக்கு பெண்ணிடமும், பெண்ணுக்கு ஆணிடமும் நேசத்தை வளர்க்கும்.


கோரக்கனவுகளை நீக்கி இனிய தூக்கத்தை கொடுக்கும்.

கூட்டுதொழிலில் உள்ள கருத்து வேறுபாட்டை போக்கும்.


கலைத்துறையில் உள்ளவர்களுக்கு செல்வாக்கும் பெரும் புகழும் வந்து சேரும்.

பிறரை வசீகரிக்கும் வகையில் பேச்சாற்றல் உருவாகும்.

சிலருக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு உருவாகும்.

மலட்டு தன்மையை போக்கும், ஆண்குழந்தையை விரும்பும் பெண்கள் வைரம் அணிந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இதயத்துக்கு வலிமை சேர்க்கும் சக்தி இதற்க்கு உண்டு.

சளி,சம்பந்தப்பட்ட நோய்களை போக்கும். கருப்பை கோளாறை சரி செய்யும். சக்கரை நோய், மனநோய் ஆகியவற்றை சரி செய்யும்.

வாதம், பித்தம் போன்ற நோய்களில் இருந்து காத்து ஆண்மைதன்மையை இழக்காதவாறு செய்யும்.


குற்றமற்ற, தரமான வைரத்தை அணிபவர்களுக்கு அஸ்வமேத யாகம் செய்த பலன்கள் கிடைக்கும்.என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ஜனவசீகரம், முகக்கவர்ச்சி, இல்லாமல் தவிப்போர்களுக்கு இவை இரண்டையும் அள்ளிக் கொடுக்கிறது.

வைரத்தை அணிபவர்களுக்கு மனத்தில் இதுவரையிலும் இருந்த காரணமில்லாத கவலைகள் மறைந்து விடும்.
மனத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

இல்லற வாழ்க்கையில் அதிக அன்யோன்யம் உண்டாகும்.

எப்போதும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செய்யும் காரியங்களில் வெற்றியும், அதிக பணப்பெருக்கமும் உண்டாகும்.

செலவுகள் ஏற ஏற வரவும் அதிகமாகிக் கொண்டு வரும்.

அணிபவர்களுக்கு வாகனயோகமும் வீடு யோகமும் அவசியம் உண்டாகும்.
சொத்துக்கள் சேரும். நிலபுலன்கள் அதிகம் ஏற்படும்.

லட்சுமியின் அருட்கடாஷம் நாளுக்கு நாள் பெருகிவரும்.

மக்களிடையே செல்வாக்கும், கௌரவமும் உண்டாகும்.
அதிக வெற்றிகளை வைரம் உண்டாக்குவதால் மனத்தில் சுயநலமும், பேராசையும், அதிகம் உண்டாகும்.

அவற்றைக் குறைத்து கொண்டால் அதிர்ஷ்ட்டங்கள் மேலும் பெருகும்.

பாலின நோய்கள் (VENEREAL DISEASES) நிவாரணமாகும்.

அதிக உழைப்பைச் செய்யாமலேயே, அதிக செல்வம் வந்து சேரும்.

நிறமற்ற, நீலம் அல்லது சிவப்பு நீல ஒளியைக் கொண்ட, கரும்புள்ளிகள் இல்லாத வைரமே மிகவும் சுபமான வைரமாகும்.

மஞ்சள், சிவப்பு ஒளி தரும் வைரம், அரசியலில் உயர் பதவிகளை வகிக்கும் ஆற்றலைத் தருகிறது.

வெண்மையான வைரம் மதம் மற்றும் ஆன்மிக, தெய்வீக காரியங்களுக்கு ஏற்றது.

மஞ்சள் நிறம் மட்டும் கொண்ட வைரம் வெற்றியையும் செல்வ செழிப்பினையும் தரும்.


சிற்றின்ப நோய்கள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், கண் நோய் போன்ற நோய்களும் வைரத்தை அணிவதால் குணமாகும்.

ஆண் குழந்தையை விரும்புபவர்கள் சிறு கருமை கலந்த வைரங்களை அணிவது நன்மையளிக்கும். வைரம் அணிபவர்களை விஷ ஜந்துக்கள் மற்றும் தீய ஆவிகள் தீண்டாது

வைரத்தின் மாற்றுக்கற்கள்:
#######################

வைரம் கற்கள் விலை அதிகமாவதால் அனைவரும் பயன்படுத்த முடியாது என்ற நிலை உருவாகி உள்ளது.


அதனால் வைரத்திற்கு மாற்று இரத்தின கற்களாகக் ஜிர்கான் (ZIRCON) பயன் படுத்தலாம்.

வெள்ளை புஷ்பராகம் (WHITE TOPAZ) கற்களையும் வைரத்திற்கு மாற்றாக அணிந்து நன்மை அடையலாம்.


வெள்ளை சபையர் (WHITE SAPPHIRE) கற்களையும் பயன்படுத்தி அதிர்ஷ்ட்டங்களைப் பெறலாம்.


வெள்ளை நிற டோர்மலின் கற்களையும் (WHITE TOURMALINE STONE) பயன்படுத்தலாம்.


வாழ்க வளமுடன்...
===========================
மனிதனின் உடல் பஞ்சபூத சக்திகளால் ஆனது என்பது அனைவரும் அறிந்ததே .

நம்உடலில் உள்ள ஏழு சக்கரங்கள் தான் நம் உடலை இயக்குகிறது.

நம் உடலுக்கு தேவையான பஞ்சபூத சக்தி பெற நவரத்தினங்களில் உல்ல கதிர்கள் பெரிதும் துணைபுறிகிறது.

அந்த கதிர்கள் தான் உடலில் உள்ள நம் சக்கரத்தை இயக்கும் போது தான் ஞானமும் , மேன்மை காண நல்ல சிந்தனைகளும் பிறக்கும்.

மேலும் நம் வாழ்வில் சுபம் தரகூடிய கிரகங்களை கணித்து,சுபங்களை அதிகரிக்க செய்ய தேவையான சிறந்த இராசி கற்கள் தேர்வு செய்வது, குற்றம் அற்ற இரத்தினத்தை பரிசோதித்து, சித்தர்களின் வழி முறையில் இரத்தினத்தை சுத்தி செய்த பின்பு ,அதை உங்கள் உடலில் எந்த கையில், எந்த விரலில் அணிந்தால், உடலில் உள்ள நரம்பு முலம் இரத்தினங்களில் உள்ள கதிர்கள் சரியாக, உடலில் போய் சக்கரங்களை இயங்க செய்யும், போது தான் அதீத சக்தியை பெற்று அணைத்து ஆற்றலுடன் நீங்கள்இயங்களாம். 
இதுவே இரத்தினம் அணிந்து வெற்றி பெற்றவர்களின் கறுத்து.

நம் முன்னோர்களான அரசர்களும், ஞானிகளும், சித்தர்களும் இராசிகற்களை பயன்படுத்தி அதீத சக்தியை பெற்று தியானம் மற்றும் அராய்ச்சியில் ஈடுபட்டு தான், அவர்கள் நினைத்த காரியத்தை சாதித்து உள்ளனர்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் இறைவன் நவக்கிரகங்கள் வாயிலாகத்தான் நடத்துகின்றான்.
அந்த நவகிரகங்களின் பிரதிநிதிகள் தாம் இந்த நவரத்தினக் கற்கள்.
ஏதாவது ஒரு கிரகத்தின் தன்மையையோ நவரத்தினத்தின் தன்மையையோ
பிரதிபலித்து,தன்னால் இயன்ற அளவு மக்களுக்கு நற்பலன்களைக் கொடுக்கிறது.

மனிதனின் ஜாதக ரீதியான தோஷங்களையும் உடல் ரீதியான குறைபாடுகளையும், நிவர்த்தி செய்து அந்த மனிதனுக்கு எப்போதும் அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் வாரி வழங்கிக் கொண்டிருப்பது இரத்தினங்களேயாகும்.

நாம் வெற்றி பெற வேண்டுமானால், குருவின் வழி முறையில் தேர்வு செய்யும் இராசி கல் மோதிரம் சிறப்பான மேன்மையை தரும்.

வாழ்க வளமுடன்...........
#################################
AAGARSHAN METAL WORKS
NATURAL GEMSTONE & SPIRITUAL PRODUCTS
www.spirituals4u.blogspot.in
whatsappp:7305066366

Comments

Popular posts from this blog

மாணிக்கம் கல் பதித்த மோதிரம் : (RUBY GEMS STONE BENEFIT)ANGUTTI

மாணிக்கம் கல் பதித்த மோதிரம் : (RUBY GEMS STONE BENEFIT)ANGUTTI ################################### சிம்ம இராசிகாரர்களும்,  சூரியனுக்கு சார்புள்ள நட்சத்திரங்களும் கிருத்திகை -உத்திரம்-உத்திராடம்,மற்றும் ஜாதகத்தில் சூரிய தசை-சூரிய பார்வை- சூரிய புத்தி நடக்கும் அன்பர்களும். எண் கணிதப்படி-1,10,19,28ம்  தேதியில் பிறந்தவர்களும்  மாணிக்கம் இராசி கல்  பதித்த மோதிரம் அணியலாம். ******************************* மாணிக்கம் அணிவதன் பயன்கள்: ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்  உள்ள தோல்விகளையும்  துயரங்களையும்,போக்கவும். இரத்தினங்கள் அணிவதால்  நல்லஅதிஷ்ர்டத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும்,  செல்வச் செழிப்பையும்  பெறுவதற்கு இரத்தினங்கள்  கிரகங்களின் பிரதிநிதிகளாகவும்  செயல்படுவதால் தான் வெற்றி படிகளாக மனிதனை மாற்றி  உயர்த்தி விடுகின்றன. மாணிக்கக் கல் சிகப்பு நிறக் கதிர்கள் {RED RAYS} வெளியேற்றிக் கொண்டே இருக்கின்றன. சூரியனுடைய கதிர்கள் ஒழுங்கு செய்யப்பட்டு உடலில் ஈர்த்து நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகின்றது. குளிர்ச்சி சம்பந்தத்தினால் ஏற்படும் வியாதிகளை மாணிக்க கல் க

சந்திர காந்தக்கற்கள் பயன்கள்(MOON STONE):

சந்திர காந்தக்கற்கள் பயன்கள்(MOON STONE): இந்தக் கற்களில் வைடூரியத்தைப் போன்ற ஒளிப்பட்டைகள் கல்லின் நடுவில் அழகாக இருக்கும். இந்தக் கற்களைச் சுழற்றும் போது அந்த ஒளியும் சுழன்று கொண்டே வரும்.  இதன் கீழ்பகுதியைத் தட்டை வடிவிலும், மேல்பகுதியை மழமழப்பாகவும் வெட்டிப் பட்டை தீட்டுகின்றனர். இவைகளை ஈச்சங்கொட்டை , கப்பிக்கொட்டை போன்ற வடிவங்களிலும் வட்டமாகவும் பல உருவங்களில் தேய்த்து உருவாக்குகின்றனர். இவை ஒளி ஊடுருவிச் செல்லும் அழகான கற்களாகும். இந்தச் கற்களானது பார்ப்பதற்கு வெண்மையாகவும் குளுமையாகவும் சந்திரனைப் போன்றும் இருப்பதால் சந்திர காந்தம் என்று வடமொழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரவில் சந்திரனின் ஒளி இதன்மேல் படும்போது இந்தக் கல்லிலிருந்து நீர்த்துளி உண்டாகும் என்பார்கள். ரோமானியர்கள் இக்கற்களை லூநாரிஸ் என்று அழைத்து மகிழ்ந்தார்கள். கற்கள் கிடைக்கும் இடங்கள்: ########################## இந்தக் கற்கள் அதிகமாக ஸ்ரீலங்காவில்தான் கிடைக்கிறது. மியான்மர்(பர்மா) ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தான்சேனியா, பிரேசில், அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் அதிகமாகக் கிடைக்கிறது. கேரளா

நவரத்தினங்களில் மரகதம் கல் பயன்கள்:

NATURAL EMERALD GEMSTONE BENEFITS: மரகதக் கல்லின் ஆங்கிலப் பெயர் எமரால்ட். ஒளி புகக்கூடிய அருகம்புல்லின் நிறமுடைய இக்கல் பெரில் எனப்படும் வகையைச் சேர்ந்தது. வெளிர் பச்சை நிறத்திலிருந்து அடர்பச்சை நிறம் வரை கிடைக்கும். இந்த மரகதம் பெரில்லீயம் அலுமினியம் சிலிகேட் என்ற மூலப் பொருளாளல் ஆனது. மரகதம் அடர்த்தி குறைவானதாகவும் எடை இலேசானதாகவும் இருப்பதால் ஒரு காரட் எடையுள்ள மரகதம் சற்று பெரியதாக இருக்கும். இது நொருங்கும் தன்மை கொண்டது என்பதால் இதை உபயோகிப்பதில் கவனம் தேவை. குரோமியம் என்ற பொருள் கல்லில் இருந்தால்தான் அது மரகத் கல்லாகும். இல்லையெனில் அது பச்சை நிற பெரில் என்றே அழைக்கப்படுகிறது. பச்சை நிற பெரில்லை தகுந்த சூழ்நிலையில் உஷ்ணம் செய்தால் அக்குவாமெரின் எனப்படும். நீலபச்சை நிறக் கல்லாக மாறுகிறது. இந்த நிறமாற்றம் நிரந்தரமாக இருக்கும் பட்சத்தில் அது உலக அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. சாம்பிராணி வாசம் வந்தால் தான் மரகதம் என்ற தவறான கருத்து ஒன்று மக்களிடையே உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் திருவுருவச் சிலையானது மரகதத்தில் ஆனது என்பதால் பெரிய அளவில் அதிர்வுகளை