Skip to main content

ஸ்படிகம் மாலை ஸ்படிகம் ஸ்ரீ மஹா மேரு சக்கரம்

ஸ்படிகம் மாலை ஸ்படிகம் ஸ்ரீ மஹா மேரு சக்கரம்
                                                        

பல நுறு வருடங்களாக பூமிக்கு அடியில் தேங்கியுள்ள நீர் பாறையாக மாறும். அந்த பாறையில் இருந்து சுத்தமான கற்களை தேர்வு செய்து. அதில் தான் ஸ்படிக மாலை, ஸ்படிக லிங்கம் செய்வார்கள்.

ஸ்படிக மாலை அணிவதால் கிடைக்கும்
அறிவியல் ரீதியான பலன்கள்.

1] ஸ்படிக மாலை அணிவது. நமது உடலில்
அதீதமாக உள்ள சூட்டை கட்டுபடுத்தும்.

ஸ்படிக மாலை நமது உடலில் சரியான அளவில் உள்ள சூட்டை குறைக்காது. உடல்
சூட்டை சீரான, சரியான அளவில் வைக்கும்.

2] மனித மனம் ஆல்பா, பீட்டா என்று இரண்டு
நிலைகளில் இருக்கும். இன்று பெரும்பாலான
மனித மனம் பீட்டா நிலையிலேயே இருக்கிறது.

மனித மனம் ஆல்பா நிலையில் இருந்தால்
தான் அமைதியாக இருக்கும். 

ஸ்படிக மாலை நமது மனதை அலை பாயும் பீட்டா நிலையில் இருந்து. அமைதியான ஆல்பா நிலைக்கு அழைத்து செல்லும். 

ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு. ஸ்படிக மாலையை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை.

நமது உடல் சூடு, உள்ள சூடு இரண்டையும் தணிக்கும் ஆற்றல் ஸ்படிகத்திற்க்கு இணையாக வேறு எதற்க்கும் இல்லை.

ஸ்படிக மாலை குறித்து கேட்கப்படும் கேள்விகள்.

1]ஸ்படிக மாலை அணிவதர்க்கு என்று
ஏதேனும் அடிப்படை தகுதிகள் இருக்கிறதா?

2] ஸ்படிக மாலை அணிவதற்க்கு ஏதேனும்
ஆச்சார. அனுஷ்டானங்களை கடைபிடிக்க
வேண்டுமா?

3] ஸ்படிக மாலை அணிவோர்கள் அசைவம்
சாப்பிட கூடாதா?

4] ஸ்படிக மாலை பெண்கள் அணியலாமா?

5] ஸ்படிக மாலையில் எவ்வளவு? விதமான
தரங்கள் உள்ளது?

6] ஸ்படிக மாலையின் தரத்தை எவ்வாறு
கண்டறிவது?

ஏற்கனவே நான் மேலே குறிப்பிட்டதை போல் அன்று மக்கள் பயன் பெற வேண்டும். என்பதற்க்காக சித்த புருஷர்களும், ரிஷிகளும் அறிவியலை ஆன்மீகம் என்னும் தேனில் கலந்து கொடுத்தார்கள்.

அது போலவே ஸ்படிகம். பின்னால் வந்த குறுக்கு புத்தி உடைய சில சாமானிய மக்கள் ஸ்படிக மாலை இன்னார், இன்னார் அணியலாம்.

ஸ்படிக மாலை அணிய இன்ன, இன்ன விதி முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அவர்கள் இஷ்டத்திற்க்கு மனதில் தோன்றியவைகளை எழுதி வெய்த்து விட்டு சென்று விட்டார்கள்.

அறிவியல் ரீதியாக. ஸ்படிகம். சிறுவர் முதல் பெரியவர் வரை ஆண்கள், பெண்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம்.


காற்று, சூரியன், சந்திரன், நீர் என்று இறைவனின் அணைத்து படைப்புகளும் அனைவருக்கும் பொதுவானது தானே.
நீர் அனைவர்க்கும் பொதுவானது என்றால். நீர் பாறையில் இருந்து கிடைக்கும் ஸ்படிகம் மட்டும் எவ்வாறு? ஹிந்துக்களுக்கு மட்டும். உரிய ஒன்றாக ஆகும். 

நாஸ்திகர்கள் உட்பட இதை யார் வேண்டுமானாலும் அணியலாம்.

தெய்வ பக்த்தி உள்ளவர்கள் 108 மணிகள் உடைய ஸ்படிக மாலையை கையில் வெய்த்து. உங்களுக்கு பிடித்த இறைவனின் பெயரை. கிடைக்கும் நேரத்திற்க்கு தகுந்தார் போல் ஜெபம் செய்யலாம்.

அதை தவிர்த்து. இறை நம்பிக்கை உடையவர்கள், இல்லாதவர்கள் இருவருமே அதி காலையில் எழுந்து. மொட்டை மாடி போன்ற ஒப்பன் ச்பேச்சில். உங்கள் லட்சியம் என்னவோ அதையே திரும்ப, திரும்ப சொல்லி. மொட்டை மாடியில். ஜெபம் போல் ஸ்படிக மலையை வெய்த்து செய்யுங்கள்.

நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் மனம் ஒருநிலைப்பட வேண்டும். 

அமைதியான அதிகாலை வேளை தான் மனதை ஒரு நிலை படுத்த சரியான நேரம்.

பிரும்ம முகூர்த்தம் எனப்படும் மூன்றிலிருந்து ஐந்து மணி வரை இதை நீங்கள் சும்மா. முயற்ச்சி செய்து பாருங்க. 

உங்களுடைய ஆசை நியாயமான ஆசையாக இருந்தும். அது நிறைவேற கால தாமதம் ஆனால். இவ்வாறு செய்வது. அதன் கால தாமத்தை குறைக்கும். 

முக்கியமாக இதன்மூலம் உங்களுடைய நேர்மறை எண்ணம் அதிகரிக்கும்.

ஸ்படிக மாலையை நீங்கள் கழிவறை செல்லும் நேரம் தவிர. மீதி அணைத்து நேரங்களிலும் கழுத்தில் போட்டு கொள்ளலாம். 

முக்கியமாக நீங்கள் குளிக்கும் பொழுது. கழுத்தில் ஸ்படிக மாலையோடு குளிப்பது நல்லது.

கோவில்களிலும் ,மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும்,காதி கிராப்ட், பூம்புகார் போன்ற விற்பனை நிலையங்களிலும் ஸ்படிகமணி மாலைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஸ்படிகம் எப்படி உற்பத்தி ஆகின்றது ?

அதை மாலையாக்கி அணிந்து கொள்வதால் என்ன பயன் ? அதனை ஏன் அணிய வேண்டும் ?

பார்க்கலாம் படிகாரம் என்பதும் ஸ்படிகம் என்பதும் வேறு வேறு.

சிறு சிறு காயங்கள் படும் இடத்தில் படிகாரத்தை நீரில் தொட்டு லேசாக தடவினால் காயமான இடம் செப்டிக் ஆகாமல் தடுக்கப்படும்.

இதனை பெரும்பாலும் சலூன்களில் பயன்படுத்துவதை பார்க்கலாம்.

சில இடங்களில் படிகாரத்தை திருஷ்டிக்காக கருப்பு கயிற்றில் கட்டி வாசலில் தொங்க விட்டிருப்பார்கள். 

மேலும் சில சித்தவைத்திய தேவைகளுக்கும் படிகாரம் பயன்படுத்தப்படுகிறது .

ஆனால் ஸ்படிகம் முற்றிலுமாக மாறுபட்டது. பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் உறைந்து போகும் நீர் பாறைகளாக உருப்பெற்று விடும்.

அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதில் உள்ளே அழுக்கில்லாத, தூசிகள் இல்லாத, கம்பிகள் இல்லாத, உடைசல்கள் இல்லாத, தூய்மையான கற்களை தேர்ந்தெடுத்து அதனை பலவிதஅளவுகளில் , உருண்டையாகவும் , பட்டைதீட்டியும் தயாரித்து அதில் துவாரமிட்டு மாலையாக்கி விற்பனை செய்யப்படுகிறது.

இதுவே ஸ்படிக மாலை எனப்படுகிறது.இந்த பாறைகள் , பெரும் பெரும் மலையின் பாறைகள் போலில்லாமல் ஆறு பட்டைகொண்ட தூண்கள் போலவும், ஏழு பட்டைகள் கொண்ட குச்சிகள் போலவும் பூமிக்கு அடியில் கொட்டிக் கிடப்பதுண்டு. 

அதில் எல்லாம் தேர்ந்தெடுத்து கொஞ்சமும் பழுதில்லாத உள்ளே புகையோ , கருப்போ இல்லாத சுத்தமான ஸ்படிகங்களை மாலையாக்கி விற்பனை செய்கிறார்கள் .

இந்த ஸ்படிக குச்சி வகைகளை பாலிஷ் செய்து ரெய்க்கி , ஹீலிங்
பயிற்சிக்கு பயன்படுத்துவதும் உண்டு.

உயர்ந்த தான ஸ்படிகமணி மாலையை நீரில் போட்டால் தெரியாது , நீரோடு நீராக ஒன்றி இருக்கும் , தனியாக தெரியாது.

முதல் தரம் , இரண்டாம் தரம் , மூன்றாம் தரம் என பத்தாம் தரம் வரை ஸ்படிக மாலைகள் கிடைக்கின்றன.

அதில் உள்ள 108 மணிகளும் ஒரே மாதிரியான அளவிலும் , மிகவும் துல்லியமானதாகவும், நீர்த்துளிகளை கோர்த்தது போல் இருக்கும்.

முதல்தர ஸ்படிகமணி மாலைதான் நல்லது பூம்புகார் , காதி கிராப்ட் , மற்றும் சில கடைகள் நல்ல ஸ்படிகமணிகளுக்கு இடையில் மிக சாதாரணமான ஸ்படிகமணிகளை இணைத்து விற்கின்றார்கள்.


அது நல்லதல்ல துல்லியமற்றதும், ஊடுருவும் தன்மையற்றதும், வெள்ளையாகவும் இருக்கும்.

அப்படி என்னதான் இருக்கின்றது அந்த உயர்ந்த ஸ்படிகமணி மாலையில் ?

மனிதர்காகிய நாம் ஒருநாளில் விடும் மூச்சு எண்ணிக்கை என்ன தெரியுமா?

சராசரியாக 21,600 மூச்சாகும். நாம் சரியான விகிதத்தில் மூச்சு விடுவோமானால் ஒருநாளில் 21600 மூச்சு விடுவோம். 

ஆனால் இன்றைய பரபரப்பு உலகில் முப்பதாயிரம் வரை விடுவதாக சொல்கிறார்கள். (இதனால் ஆயுள் குறையும்).

இந்த ஸ்படிக மணி ஒன்று, ஒரு மணி நேரத்திற்கு 21600
அதிர்வலைகளை வெளிப்படுத்துவதாக கண்டறிந்திருக்கின்றார்கள்.

அப்படியானால் நம் கழுத்தில் அணியும் 108 ஸ்படிகமணிகள் கொண்ட
மாலை எவ்வளவு அதிர்வலைகளை நம்மைச் சுற்றிலும் பரவிடச் செய்யும் என்று எண்ணிப் பாருங்கள்.

ஒரு அரண்போல நம்மை பாதுகாக்கும் முழுமையான கவசமாக முதல்தர ஸ்படிகமணி மாலை விளங்குகிறது. அதனால் என்ன ?

தெய்வ அருள் , மனஅமைதி, சாந்தம் , நல்ல சிந்தனை , பரோபகார செயல்கள், தெளிவான அறிவு , தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம்முள் நிகழ்த்தும் அதிசய கருவியாகும்.

மேலும் .. ஸ்படிகமணி மாலை அணிந்து கொண்டவர்களுக்கு, அவர்களிடம் சொல்லப்படும் , அவர்கள் கேள்விப்படும் , பார்க்கும் எந்த சோகமான செய்தியும் , காட்சியும் அவர்களுக்கு உள்ளே புகமுடியாது .

 அதனால்அவர்களை பாதிக்காது. இல்லாவிடில் ஒருவர் கேள்விப்படும் அல்லது அவரிடம் சொல்லப்படும் , அவர் பார்க்கும் எந்த சோகமான
செய்தியும் அவரை பல நாட்களுக்கு மனவேதனை அடையச் செய்யும்.

(இது உபாசகர்களுக்கு பொருந்தும்) இது ஒரிஜனலான முதல்தர ஸ்படிகமணி மாலைக்கு மட்டுமே பொருந்தும்.ஸ்படிகமணி மாலையுடன் வேறு எந்த மணிகளையும் சேர்த்து மாலை அணியக்கூடாது .

(ருத்ராட்சமாக இருந்தாலும் சேர்க்கக்கூடாது அதனை தனியாக அணிந்து கொள்ளலாம்)கொஞ்சம் தரமற்ற ஸ்படிகமணி மாலையாக
இருந்தாலும் அது செயல்படாது. கவனித்து பார்த்து வாங்குங்கள் , நிறைவான பலன் பெறுங்கள். பூமியிலிருந்து கிடைக்கும் ஸ்படிகம்
சக்தியின் அம்சமானது.

இமயமலைச் சாரலில் உள்ள நேபாள நாட்டில் சில முக்கிய இடங்களில் உள்ள பாறைகளை உடைத்துத் தோண்டும் பொழுது அபூர்வமாகக் காணப்படுவதே க்ரிஸ்டல் (Crystal) வகை ஸ்வர்ண ஸ்படிகம் ஆகும்.

இவை பல வண்ணங்களில் கிடைத்தாலும் பன்னீர் போன்ற தெளிவான நிறத்தால் உள்ள ஸ்படிகம் தான் பிற தாதுக்களால் கலவை
பெறாத உண்மை ஸ்வர்ண ஸ்படிகம் ஆகும்.

ஸ்வர்ண ஸ்படிகத்தின் அடர்த்தி எண் அதிகம். இதனால் இதன் திண்மையும் அதிகம்.உருவத்தில் சிறியதாக இருந்தாலும் எடைஅதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட ஸ்படிக கற்களால் இணைக்கப்பட்ட ஸ்வர்ண ஸ்படிக மாலை உஷ்ணத்தையும், குளிர்ச்சியையும் வேகமாகக் கடத்தும் குணமுடையது.

ஒளியையும், உரிய நிறத்தையும், காந்த சக்தியையும் இந்த பிரபஞ்சத்திலிருந்து தன்னுள் ஈர்த்து வைத்துக் கொண்டு அதனை
அணிபவர்களுக்கு வழங்கும் குணம் இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலைக்கு உண்டு. இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலையில் மொத்தம் 108 ஸ்வர்ண ஸ்படிக மணிகள் உள்ளன.

ஒவ்வொரு மணியும் ஒவ்வொரு நக்ஷத்திர பாதத்தின்பிம்பமாக இருக்கும். தனது சக்தியை தனது அருகிலுள்ள மணிக்கு இது எளிதாக கடத்த வல்லது.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மின் காந்த நிறம் உண்டு. இந்த பிரபஞ்சத்தில் பல்வேறு நிறங்கள் எங்கும் வியாபித்திருக்கின்றன. 

இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலையை அணிந்து கொள்பவர்கள் நிறமாலைக் கொள்கைப்படி தனக்கு அதிர்ஷ்டமாக அமைந்துள்ள நிறத்தை இந்த
உலகிலுள்ள பஞ்ச பூதங்கள் மூலம் பெற்றுவிடுகின்றனர்.

இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலையை அணிபவர்களின் முகம் பிரகாசமாக இருக்கும். நரம்பு மண்டலமும், இரத்த ஓட்டமும் சீரடையும். வேலைப் பளுவினால் ஏற்படும் களைப்பு தெரியாது.

இதயமும், நுரையீரலும் ஒழுங்காக இயங்கும். இதனால் ஆயுள் விருத்தியாகும். இரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு அரும்பெரும் மருந்து இது. நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். இது கர்ப்ப மூலாதாரங்களைத் தூண்டிவிடுவதால் புத்ர சந்தான விருத்தி இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் கிடைக்கும்.

தெளிவான சிந்தனையை இது தூண்டுவதால் மாணவர்களுக்குக் கல்வி சிறக்கும். குழந்தைகள் படிக்கும் மேஜையில் வைத்தால் கவனம் ஒருமுகப்படும்.

நல்லுணர்வை இது ஊக்குவிப்பதால் சொல் வன்மை மிகும். இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலையை அணியும் ஜோதிடர்கள், ஆசிரியர்கள், சட்ட வல்லுநர்கள் வாக்கு பலிதத்தைப் பெறுவர்.

இதனை அணியும் அரசாங்க அதிகாரிகள் ஆளுமையைப் பெறுவதால் துணிச்சலாகப் பணியாற்றுவதற்கு இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலை உற்ற துணையாக இருக்கும். இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலை குபேர மந்திரத்தால் உருவேற்றப்பட்டது.

இது பில்லி, சூன்ய, ஏவல்களை விரட்டவல்லது. இதனை அணிந்திருப்பவர்களிடம் எதிரிகள் சரணடைவர்.

இதனை அணிந்து சென்றால் எண்ணிய காரியங்கள் கைகூடும். வாகனத் தொழிலில் இருப்பவர்களுக்கும், அடிக்கடி வாகனத்தில் பயணம் மேற்கொள்பவர்களுக்கும் இயந்திரத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது மிகுந்த பாதுகாப்பைக் கொடுக்கும்.

சுத்தமான ஸ்படிக மணியை தண்ணீரில் போட்டால் மணி இருப்பது தெரியாது.சூரிய ஒளியில் இம்மணியை காண்பித்தால் (7 கலர் ) வானவில் ஒளி தெரியும்,நல்ல படிகத்தை ஒன்றுடன் ஒன்று மோதினால் தீப்பொறி உண்டாகும்.

இதுவே படிகத்தை சோதிக்கும் முறை.இப்படி தனக்குள் உள்ள ஒளியின் நிறமாலையை நம் உடலுக்குள் படிகமாலை அனுப்புவதை இதன் மூலம் அறியலாம்.ஸ்படிகம் பூமியிலிருந்து எடுப்பதால் முறையான பஞ்சபூத பரிகாரம் தீட்சை மந்திரம் சொல்லாமல் மாலையாக அணியக்கூடாது.

ஸ்படிகமாலையை ருத்ராட்சம் இல்லாமல் அணியக்கூடாது. அசைவ உணவு சாப்பிடும், தூங்கும் போது, தீட்டு வீடுகளுக்கு செல்லும் போதும் அணியக்கூடாது. ஸ்படிகத்திற்கு மின்சாரத்தை தாங்கக்கூடிய சக்தி உள்ளது.
ஸ்படிகலிங்கம் வீட்டில் வைத்துபூஜை செய்தால் சகலவித நன்மைகளும் கிடைக்கும். இராமேஸ்வரத்தில் இராமநாதர் சன்னதியில் அதிகாலை 4 மணிக்கு ஸ்படிகலிங்க தரிசனம் மிகவும்சிறப்பு வாய்நதது.

எனவே ஸ்படிகம் அணிவது உடலுக்கு மிகவும் நன்மை தருகிறது தங்கமும் வெள்ளியும் அணியும் போது கைக் கொள்ளும் நம்பிக்கைகள் போலவே படிக மாலை அணிவதன் பின்னும் சில நம்பிக்கைகள் உண்டு.

இதை அணிய உத்தமமான நட்சத்திரம் கார்த்திகையாம். ஒரு நாள் பசுவின் சாணத்தில் மூழ்கவைத்து படிக மாலையை தண்ணீர் பால் என்பவற்றில் கழுவி குருவின் உதவியால் அணிய வேண்டும் என்பது ஆசாரவிதி.

எந்த காலமானாலும் வெப்பத்தை தடையும் சக்தி இம்மாலைக்குண்டு. கிரகங்கள் மனிதரில் செலுத்தும் செல்வாக்கைக் கட்டுபடுத்த இம் மாலைக்கு இயலும்.இந்த ஸ்படிக மாலையை இரவில் கழற்றித் தரையில் வைக்க வேண்டும்.

அப்போது பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறுபடியும் ஈர்ப்புப் பெறும். தினமும் இதைச் செய்ய வேண்டும். அந்த தரு ணத்தில் உங்கள் மன, உடல் அழுத்தம் குறை வதை நீங்கள் உணரலாம். எத்தனை நாட்க ளுக்கு அணிந்தாலும் அதன் சக்தி குறையவே குறையாது.

ஸ்படிகப் பாறைகளை அனைவரினதும் கண் பார்வை படுமாறு வைக்கும் போது அந்த இடத்தின் தன்மை மிகவும் சாந்தமாகவும்,சந்தோஷமாகவும் இருக்கும்.

ஸ்படிகத்தை எந்த வடிவில் வைத்திருந்தாலும் வாரம் இரு முறை யாவது தண்ணீருக்குள் அந்த ஸ்படிகத்தைக் குறைந்தது 4 மணி நேரம்
ஊறவிடவேண்டும், பின்பு அதை அதன் இடத்திலேயே வைக்கலாம்.
அதை அபிஷேக முறையிலும் செய்யலாம்.

ஸ்படிகப் பாறைகள் வாங்கும்போது விஸ்திரண வடிவில் இருக்க வேண்டும். குறுகிய துறுப்பு உள்ளதைத் தவிர்க்க வேண்டும். ஜபம் செய்யும் பொது அந்த வெண்மை நிறமான படிகத்தை உருட்டும் போது கையில் அழுத்தம் ஏற்ப்பட்டு உடலில் குளிர்ச்சியை உண்டாக்குகிறது.

மேலும் அந்த படிக மணியிலிருந்து வெளிப்படும் நிறமாலைகள் நம் கட்டைவிரல் மற்றும் நடுவிரல் நுனியின் மூலமாக மூளை,பினியல் சுரபி,கண்கள்,காதுகள் ஆகிய உறுப்புகளை சென்றடைந்து அந்த உறுப்புகளைத் தூண்டுவதோடு குளிர்ச்சியையும் அளிக்கிறது.

இந்த மணி மாலையை அணிவதால் இது தொழிலும் ,நெஞ்சிலும் பட்டு இதன் குளிர்ச்சியும் இதன் நிறமாலைகளும் உள்ளே ஊடுருவிச் சென்று இருதயத்திற்கு நன்மை செய்வதோடு ரத்த அழுத்த நோயை குனபடுத்துவதோடு நீரழிவு நோயையும் குணப்படுத்தும்.

இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலையை ஜப மாலையாகப் பயன்படுத்தி மந்த்ர ப்ரயோகம் செய்தால் வேண்டிய தெய்வம் ப்ரசன்னமாதி அருள் பாலிக்கும மிகவும் குளிர்ச்சியான பிரதேசங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்கவேண்டும்.
மற்றவர்கள் யார் வேண்டுமா னாலும் அணியலாம். ஸ்படிக மாலையை ஒருவர் அணிந்த பின் மற்றவர்கள் மாற்றி அணியும் போது தண்ணீருக்குள் குறைந்தது 3 1/2 மணி நேரமாவது ஊறவிட வேண்டும். மற்ற ரத்தின உபயோகத்திற்கும் ஸ்படிக மாலை உபயோகத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு.

ஸ்படிகத்தைத் தவிர மற்ற அனைத்து ரத்தினங்களையும் இரவில் அணியலாம். ஆனால் ஸ்படிகத்தைக் கண்டிப்பாக இரவில் அணியக்கூடாது. காரணம், அது உப ரத்தின வகையைச் சார்ந்தது மட்டுமல்ல. தானாகத் தன் அதிர்வுகளை வெளியேற்றும் சக்தி ஸ்படிகத்திற்குக் கிடையாது என்பதும்தான்.

காலையில் இருந்து இரவு வரை ஒருவர் ஸ்படிக மாலை அணியும் போது அவரது உடற்சூட்டை இந்த ஸ்படிகம் தன்வசம் இழுத்துக் கொள்ளும்.

காலையில் ஒருவர் ஸ்படிகத்தை அணியும் முன் அது குளிர்ச்சியாகவும் இரவில் அதை கழட்டும்போது உஷ்ணமாகவும் இருப்பதைக் கொண்டு இதை நீங்கள் உணரலாம்.

இந்த ஸ்படிக மாலையை இரவில் கழற்றித் தரையில் வைக்க வேண் டும். அப் போது பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறு படியும் ஈர்ப்புப் பெறும். தினமும் இதைச் செய்ய வேண்டும்.

அந்த தருணத்தில் உங்கள் மன, உடல் அழுத்தம் குறை வதை நீங்கள் உணரலாம். எத்தனை நாட்களுக்கு அணிந்தாலும் அதன் சக்தி குறையவே குறையாது.

ஸ்படிகத்தை நேரடியாகவோ, வெள்ளி அல்லது தங்கத்துடன் இணைத்தோ அணியலாம்.

வீட்டிற்கு ஒரு ஸ்படிகமாலை இருந்தாலே போதும். அதிக உஷ்ணம் உள்ள குழந்தைகள் ஸ்படிகத்தை அரைஞாணில் அணியலாம்.
இவ்வளவு அற்புதமான ஸ்படிகத்தை மற்றவர்களுக்குப் பரிசாகவும் கொடுக்கலாம். ஸ்படிக விநாயகர், சிவலிங்கம் போன்றவற்றை நமது பூஜை அறையில் வைத்து பூஜிக்கும் போது ஈர்ப்பு சக்தி நன்றாக இருக்கும்.

வாரம் இருமுறையாவது அபிஷேகம் செய்யும் போது அதன் சக்தி அப்படியே இருக்கும்.

ஸ்படிகத்தில் மிகச் சக்தி வாய்ந்தது, மகா மெகரு. இந்த மெகரு ஸ்படிகத்தை வாங்கும்போது வெடிப்பு, உடைப்பு இல்லாமல் உள்ளதா என்று சுத்தமாகப் பார்த்த பின் வாங்க வேண்டும்.

மகா மெகருவை வெள்ளி அல்லது தாமிரத் தட்டிலோ வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும்.

அதற்கும் அபிஷேகம் மிகவும் முக்கியம். ஸ்படிகத்தை யானை வடிவில் வைக்கும்போது லட்சுமி கடாட்சம் வரும்.

இவ்வளவு அற்புதங்கள் அடங்கிய ஸ்படிகத்தை அனைவரும் உபயோகித்துப் பயன் அடைவீர்களாக.....
##########################################
Shivabairavar Metal Works
Natural Gemstone Rings& Spiritual Products
www.spirituals4u.blogspot.in
mail:shivabairavaagency@gmail.com
Whatsapp:+917305066366


Comments

Popular posts from this blog

சந்திர காந்தக்கற்கள் பயன்கள்(MOON STONE):

சந்திர காந்தக்கற்கள் பயன்கள்(MOON STONE): இந்தக் கற்களில் வைடூரியத்தைப் போன்ற ஒளிப்பட்டைகள் கல்லின் நடுவில் அழகாக இருக்கும். இந்தக் கற்களைச் சுழற்றும் போது அந்த ஒளியும் சுழன்று கொண்டே வரும்.  இதன் கீழ்பகுதியைத் தட்டை வடிவிலும், மேல்பகுதியை மழமழப்பாகவும் வெட்டிப் பட்டை தீட்டுகின்றனர். இவைகளை ஈச்சங்கொட்டை , கப்பிக்கொட்டை போன்ற வடிவங்களிலும் வட்டமாகவும் பல உருவங்களில் தேய்த்து உருவாக்குகின்றனர். இவை ஒளி ஊடுருவிச் செல்லும் அழகான கற்களாகும். இந்தச் கற்களானது பார்ப்பதற்கு வெண்மையாகவும் குளுமையாகவும் சந்திரனைப் போன்றும் இருப்பதால் சந்திர காந்தம் என்று வடமொழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரவில் சந்திரனின் ஒளி இதன்மேல் படும்போது இந்தக் கல்லிலிருந்து நீர்த்துளி உண்டாகும் என்பார்கள். ரோமானியர்கள் இக்கற்களை லூநாரிஸ் என்று அழைத்து மகிழ்ந்தார்கள். கற்கள் கிடைக்கும் இடங்கள்: ########################## இந்தக் கற்கள் அதிகமாக ஸ்ரீலங்காவில்தான் கிடைக்கிறது. மியான்மர்(பர்மா) ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தான்சேனியா, பிரேசில், அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் அதிகமாகக் கிடைக்கிறது. க...

மாணிக்கம் கல் பதித்த மோதிரம் : (RUBY GEMS STONE BENEFIT)ANGUTTI

மாணிக்கம் கல் பதித்த மோதிரம் : (RUBY GEMS STONE BENEFIT)ANGUTTI ################################### சிம்ம இராசிகாரர்களும்,  சூரியனுக்கு சார்புள்ள நட்சத்திரங்களும் கிருத்திகை -உத்திரம்-உத்திராடம்,மற்றும் ஜாதகத்தில் சூரிய தசை-சூரிய பார்வை- சூரிய புத்தி நடக்கும் அன்பர்களும். எண் கணிதப்படி-1,10,19,28ம்  தேதியில் பிறந்தவர்களும்  மாணிக்கம் இராசி கல்  பதித்த மோதிரம் அணியலாம். ******************************* மாணிக்கம் அணிவதன் பயன்கள்: ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்  உள்ள தோல்விகளையும்  துயரங்களையும்,போக்கவும். இரத்தினங்கள் அணிவதால்  நல்லஅதிஷ்ர்டத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும்,  செல்வச் செழிப்பையும்  பெறுவதற்கு இரத்தினங்கள்  கிரகங்களின் பிரதிநிதிகளாகவும்  செயல்படுவதால் தான் வெற்றி படிகளாக மனிதனை மாற்றி  உயர்த்தி விடுகின்றன. மாணிக்கக் கல் சிகப்பு நிறக் கதிர்கள் {RED RAYS} வெளியேற்றிக் கொண்டே இருக்கின்றன. சூரியனுடைய கதிர்கள் ஒழுங்கு செய்யப்பட்டு உடலில் ஈர்த்து நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகின்றது. ...

சித்தர்களின் சொன்ன வழிமுறையில் செய்யப்பட்ட ஐம்பொன் மோதிரங்கள் காப்பு:

பஞ்சலோக நகை சிறப்புகள்: ######################## பஞ்சலோகம் என்றால் ஐந்து வகை உலோகம். தங்கம் , வெள்ளி,செம்பு,இரும்பு,ஈயம் என்பவை சேர்ந்த உலோக கலவையே பஞ்சலோகம். இதில் தங்கம் குருவின் சக்தியையும், வெள்ளி சுக்ரனின் சக்தியையும் , செம்பு சூரியனின் சக்தியையும், இரும்பு சனியின் சக்தியையும், ஈயம் கேதுவின் சக்தியையும். ஐந்து உலோகங்கள் மனிதனின் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் துணை புரிகின்றன. நமது உடலில் குறைபாடுள்ள சக்திகளையும், சத்துகளையும், உடலில் அணியும் போது ஐம்பொன் உலோகங்கள் , உடலில் உள்ள நரம்பு மூலம் ராஜ உறுப்புகளுக்கு பிரபஞ்ச சக்திகளையும், ஈர்த்து உடலுக்கு தேவையான ஆத்ம சக்தி, மனோ சக்தி,ஞான சக்தி, ஆண்மை சக்தியையும் பெற ஐம்பொன் உலோகம் அணிவதன் மூலம் பெறிதும் துணை புரிகிறது. நமது உடலில் உள்ள ஐம்புலன்களையும் சரிவர இயங்கச் செய்யும் வல்லமை படைத்தது. வழிபாட்டின் மந்திர அதிர்வுகளையும், ஐந்து உலோக சக்தியையும் உடலில் வாங்கும்போது ,சிந்தனை மேலோங்கும் மனம் சாந்தம்,உடல்சுறு சுறுப்பு அடைகிறது. நமது ஆன்மீக பெரியோர்களும் ,சித்தர்களும் அறிந்தே பல நூற்றாண்டு முன்னரே பயன் படுத்தி உள்ளனர் என...